கை கால் மூட்டு மருத்துவம்
கை மூட்டு
பறவைகளுக்கு பறக்க இறகுகள் போல் மனிதர்களுக்கு கைகள் (பாணி அனலினிடமாய் நின்று இடுதலும், ஏற்றலும் செய்யும். எலும்பு மேன்மையான உறுப்புகளைப் பாதுகாத்தல் அசைவிற்கு அடிப்படையாய் இருத்தல் ஆகிய செயல்களைச் செய்யும். D-வைட்டமின் குறைவினால் எலும்பு வளர்ச்சி குறைகிறது. விளையாடும் வீரர்களுக்கு மணிகட்டு எலும்பில் வலியும், வீக்கமும் ஏற்படும்
நிவாரணம்
எலும்பு உறுதிக்கு கால்சியம் & புரோட்டின்ஸ் மிக முக்கியம் பருப்பு வகைகள், சோயா, முட்டை, இறைச்சி போன்றவற்றில் இவைகள் அதிகமாக உள்ளது தவிர காளான்களை சமையலில் சாப்பிட்டு வந்தாலே கொடிய பாக்டீரியாக்களை கொன்று எலும்பை வலுப்படுத்தும்
இலந்தைப் பழத்தில் வைட்டமின்-எ, சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளன. இதனால் எலும்பும், பல்லும் உறுதி அடையும். பித்தத்தைத் தணிக்கும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்
கை, கால்களில் எலும்பு முறிந்தால் பிரண்டையை நைசாக அரைத்து சாற்றைக் கொதிக்க வைத்து மேற்பற்றாக போட்டுக் கட்டு கட்டவும்.
கஸ்தூரி மஞ்சள், பால், சாம்பிராணி, சுக்கு, மிளகு வெள்ளைக் கடுகு இவற்றை அரைத்து சாற்றைக் கொதிக்க வைத்து மேற்பற்றாகப் போட சுளுக்கு முதல் குணமாகும் எருக்க இலைகளை அரைத்து விளக்கெண்ணை கலந்து சூடாக்கி மூட்டுகளின் மீது வைத்து கட்டினால் மூட்டுவலி குணமாகும்
கால் (பாதம் & மூட்டு -நிவாரணம்
பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 3 கிராம் வீதம் கொடுத்து வர எலும்புகள் சீக்கிரம் கூடும், இதை வெந்நீரில் குழைத்து மேற்பற்றாக போடலாம்.
தவிர பிரண்டை வடகத்தை உணவு முறையிலும் இட்லி பொடி மாதிரியோ உணவு வகையில் சேர்த்து உட்கொள்ள செய்வதுடன் செரியாமையும் நீங்கும்
எலும்புகளை உறுதி 2 வேலி பருத்திச் சாறுடன், சுண்ணாம்பைக் குழைத்து,கால் வீக்கத்தில் தடவிவர கால்வீக்கம் குணமாகும் கட்டாமணக்கு இலைகளை இரும்புச் சட்டியில் தவிர போட்டு ஆமணக்கெண்ணெய் ஊற்றி வதக்கி சூட்டுடன் வீக்கப் பகுதியில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும்..
மூட்டு வலி நிவாரணம்
மூட்டு வலி என்பது ஒரு வகையைச் சார்ந்ததல்ல. மூட்டுக்கு மூட்டு மாறி மாறி வலிக்கும். எனவே தேர்வு செய்து மருந்து உபயோகியுங்கள் முடக்கத்தான் சூப்- வாதநாராயணன் கீரை சூப்-, அகத்திக் கீரை சூப் -செய்து சாப்பிடவும்.
கால்சியம் சத்துக் குறைவு, எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடற்பயிற்சி செய்யாமை போன்றவை மூட்டுவலிக்குக் காரணம்.. அசைவ உணவை தவிர்த்து அதிக காய்கறி, பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களைச் சாப்பிட்டு வரவும் ஆறிப் போன புழுங்கல் அரிசி சாதத்தை உண்ணும் பழக்கம் உள்ளவருக்கு . கீழ்வாதம் மூட்டுவலி உண்டாகும் பச்சரிசி சாதத்தில் உடல் வலிமை உண்டாகும். சிறுந்த எரிச்சலும், பித்தம் போகும். சிறிது நெய் சேர்த்து உண்பது நல்லது இல்லையென்றால் உஷ்ணத்தையும் வாயுவையும் உண்டாகும்.
காசுகட்டியை தேங்காய் எண்ணெயில் குழைத்து சேற்றுப் புண்ணுக்கு இடவும் அல்லது பழைய வெள்ளைத் துணியை பருத்தி ஆடை சுட்டு அச்சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவ குணமாகும் மஞ்சள், வசம்பு வகைக்கு 5கிராம், இதனை கைப்பிடி அளவு மருதோன்றி இலையுடன் சேர்த்து தண்ணீர் சேர்த்து மைபோல அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் அடை கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து துணியினால் இருக கட்டிவிடவும். இதனை படுக்கப் போகும் முன் செய்யவும்.
மாவிலங்கப்பட்டையை நீர்விட்டுக் காய்ச்சி, அதில் கரிய போளத்தைச் சேர்த்து அரைத்து கை, கால் மூட்டுகளில் பற்று போட்டு வர மூட்டு வீக்கம், வலி, பிடிப்பு குணமாகும்- குங்குலியத்தை- தூள் செய்து1/2 கிராம் நல்லெண்ணெயில் கலந்து பூசி வரவும்.
பருவமடைந்த பெண்கள் வலியுடன் பிரசவமானபெண்களுக்கு உளுந்துடன் சிறிது பனைவெல்லம் கருப்பட்டி கஞ்சி அல்லது களி செய்து காலை & மாலைசாப்பிட்டு வர இடுப்பு எலும்பு பலன் உண்டாகும் இதனை ஆறவைத்தோ, இரவிலோ சாப்பிடக் கூடாது.
0 கருத்துகள்